பதிவு செய்த நாள்
12
ஜூலை
2014
10:07
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா நிறைவாக நேற்று சுவாமிகளுக்கு முப்பழ பூஜை நடந்தது.கோயிலில் ஜூலை 3ல் துவங்கிய திருவிழாவில் தினம் இரவு 7 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கோயில் ஆஸ்தான மண்டபத்தை வலம் சென்று, திருவாட்சி மண்டப ஊஞ்சலில் எழுந்தருளி ஊஞ்சலாட்டம் நடந்தது.நேற்று உச்சிகால பூஜையில், மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஷ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை, உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு மா, பலா, வாழை முப்பழங்கள் படைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் சுவாமி யானை மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் முடிந்து சிம்மாசனத்தில் வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தார்.