வெம்பக்கோட்டை: திருத்தங்கல் நின்ற நாராயணபெருமாள் கோயில் ஆனி விழா, கடந்த 6 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூலை 14ல் தேரோட்டம் நடக்கிறது. தினமும் சுவாமி, தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் வெவ்வேறு வாகனத்தில் வீதி உலா வந்தனர். ஐந்தாம் நாளான நேற்று காலை மங்களாசாசனம், இரவு கருட தங்க வாகனத்தில் சுவாமி உலா நடந்தது. ஆறாம் நாளான இன்று அப்பன் யானை வாகனத்திலும் தாயார் தண்டியல் வாகனத்திலும், ஏழாம் நாள் அப்பன் தோளுக்கினியான் வாகனத்திலும் தாயார் கண்ணாடி சப்பரத்திலும்,எட்டாம் நாள் அப்பன் குதிரை வாகனத்திலும் தாயார் புஸ்ப பல்லக்கு வாகனத்திலும் வீதி உலா வருகின்றனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 14 அன்று நடக்கிறது. ஏற்பாடுகளை ஸ்ரீ செங்கமலத்தாயார் பக்த பரிபாலன சபை, ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் ததியாராதனை டிரஸ்ட், ஸ்ரீ ஆஞ்சனேயா பக்த சபா செய்கின்றனர்.