திருச்சி: ஆனி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. கோயிலில் பக்தர்களால் வழங்கப்பட்ட கனிகளை கொண்டு பந்தல் அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் வெக்காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.