நெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம் நடந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 1ம் தேதி துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, ”வாமி வீதியுலா நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு கோவில் குளத்தில் ஹஸ்ததாளாம்பிகை சமேதராய் நடனபாதேஸ்வரர் தெப்பல் உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.