விருத்தாசலம்: ஆனி பவுர்ணமியையொட்டி, விருத்தாசலம் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில், ஆனி மாத பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 7:30 மணிக்கு புலிமேல் அமர்ந்த செல்லியம்மன் அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.