பதிவு செய்த நாள்
14
ஜூலை
2014
04:07
பாச உணர்வு மிக்க மீன ராசி அன்பர்களே!
குருவும், சுக்கிரனும் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார்கள். புதன் ஜூலை 23 வரையிலும் ஆக. 8 க்கு பிறகும் நற்பலன் கொடுப்பார். குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். சுப நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறும். பொருளாதார வளம் சிறக்கும். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். வீட்டுக்கு தேவையான வசதி அனைத்தும் கிடைக்கும். மாதத் தொடக்கத்தில் உறவினர் மூலமும், பிற்பகுதியில் குடும்ப பெரியோர்கள் மூலமும் நன்மை கிடைக்கும். ஜூலை 23க்கு பிறகு ஆக. 8 வரை கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். உடல்நலம் சுமாராக இருக்கும். பித்தம் மயக்கம் போன்ற உபாதை உருவாகலாம்.
தொழில், வியாபாரத்தில் தடைகள் குறுக்கிட்டாலும், அதை முறியடித்து முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்த அதிக முதலீடு செய்ய வேண்டாம். பகைவர்கள் வகையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஜூலை 23 க்கு பிறகு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.
பணியாளர்கள் சிறப்பான பலனை எதிர்பார்க்க முடியாது. உழைக்க வேண்டியதிருக்கும். ஜூலை 23க்குப் பிறகு சிலர் வேலை நிமித்தமாக தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிய வேண்டியதிருக்கும். ஆக.8 க்கு பிறகு மேல் அதிகாரிகளின் ஆதரவும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
கலைஞர்கள் புகழ் பாராட்டு கிடைக்கபெறுவர்.அரசியல்வாதிகள் போதிய பணப்புழக்கம் இருந்தாலும் எதிர்பார்த்த பதவியைப் பெறுவது கடினமே.
மாணவர்கள் சிறப்பான பலனைக் காணலாம். ஆனால் ஜூலை 23க்கு பிறகு அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். விவசாயிகளுக்கு வருவாய்க்கு குறை இருக்காது. விளைச்சல் சிறப்பாக இருக்கும். வழக்கு விவகாரத்தில் சுமாரான பலன் கிடைக்கும்.
பெண்களுக்கு பொறுமையும் விட்டுக் கொடுக்கும் தன்மையும் தேவை. ஆக. 8 க்கு பிறகு எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். ஜூலை 22,23 ல் புத்தாடை, அணி கலன்கள் வாங்க யோகமுண்டு.
நல்ல நாள்: ஜூலை 17, 18, 22, 23, 29, 30, 31 ஆக 1, 2, 7, 8, 9, 10, 11, 14, 15
கவன நாள்: ஆக. 3, 4
அதிர்ஷ்ட எண்: 2, 8 நிறம்: வெள்ளை, மஞ்சள்
வழிபாடு: காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள். புதன் கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். சனியன்றுஆஞ்சநேயரை வழிபடுவது நன்மை தரும்.