பதிவு செய்த நாள்
18
ஜூலை
2014
10:07
கோட்டயம்:கேரளா மாநிலம் கோட்டயம் அருகே கூத்தாட்டுக்குளம் நெல்லிக்காட்டு பகவதி கோயிலில் ஆடி மாத ’மருந்து பிரசாதம்’ வழங்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது. ஜூலை 21 ல் ’மருந்து பொங்கலிடும்’ நிகழ்ச்சி நடக்கிறது. கோட்டயத்தில் இருந்து 37 கி.மீ., எர்ணாகுளத்தில் இருந்து 46 கி.மீ., துாரத்தில் உள்ளது கூத்தாட்டுக்குளம் நெல்லிக்காட்டு பகவதி கோயில். இங்குள்ள ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய நிர்வாகத்தின் கீழ், இக்கோயில் செயல்படுகிறது.நம்பூதிரி குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் இக்கோயில், பாரம்பரிய பெருமை மிக்கது. நோய் தீர்க்கும் மருந்து, பிரசாதமாக வழங்கப்படுவது இக்கோயிலின் தனிச்சிறப்பு. அம்மன் விக்ரகம் முன்னிலையில், மருத்துவ சாஸ்திர விதிமுறைகள் படி இந்த நோய்தீர்க்கும் மருந்து தயாரிக்கப்படுகிறது.
இந்த மருந்தை பெற்றுச்செல்லும் மக்கள் 41 நாட்கள் அருந்திவிரதம் இருந்தால் நோய்கள், பூர்வ ஜென்ம பாவம் அகலும் என்பது நம்பிக்கை.ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கும். இந்த ஆண்டிற்கான விழா நேற்று துவங்கி, ஆக.,16 வரை தினமும் காலை 6 மணி முதல் 10:30 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 7:30 வரையும் நடக்கும். நேற்று உதயஅஸ்தமன பூஜை உட்பட 16 பூஜைகள் நடந்தன.விழாவின் முக்கிய நிகழ்வான, ’மருந்து பொங்கலிடும் நிகழ்ச்சி’ ஜூலை 21 காலை 9 மணிக்கு நடக்கிறது. பொங்கலிடுவதற்கான பொருட்கள் கோயிலில் வழங்கப்படும். ஏற்பாடுகளை கோயில் தலைவர் நாராயணன் நம்பூதிரி தலைமையில், நிர்வாகி ஹரி நம்பூதிரி மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். பொங்கல் முன்பதிவு, பூஜை விபரங்களுக்கு 094966 20092, 094961 34500 ல் தொடர்பு கொள்ளலாம்.