வெள்ளங்தாங்கி ஐயனார் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2014 10:07
புதுச்சேரி: குயவர்பாளையம் வெள்ளங்தாங்கி ஐயனார் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. குயவர்பாளையம் வெள்ளங்தாங்கி ஐயனார் கோவிலில் ஆடி கிருத்திகை விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 7:௦௦ மணிக்கு காவடி பூஜையும், இரவு 7:௦௦ மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. வள்ளி, தெய்வாணை சமேத முருகப்பெருமான் மணக்கோலத்தில் அருள் பாலித்தார். இரவு, சுவாமி வீதியுலா நடந்தது.