பதிவு செய்த நாள்
23
ஜூலை
2014
11:07
திருவாரூர்: திருவாரூர் அருகே விளமல் மதுரபாஷினி சமேத பதஞ்சலி மனோகரர் திருக் கோவிலில் நேற்று காலை ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு விக்னேஷ் வர பூஜை, வாஸ்து சாந்தி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பத் தாம் ஆண்டு ஆடிப்பூர விழா இம்மாதம் 30ம் தேதி மிக விமர்சியாக நடக்கிறது. சக்தி பபீடங்களில் ஸ்ரீவித்யா பீடமாக அம்பிகை மூலாதார ஷேத்திரத்தில் சிவசக்தியால்ய நின்று சகல சௌந்தர்ய, சௌபாக்கியம் அருளும் தேவியாய், முடியா பிறவியை முடித்து அருளும் அன்னையாய் விளங்கி வருகிறாள்.
இக்கோலில் வீற்றிருக்கும் அன்னைக்கு ஆடிப்பூரம் ஆண்டுதோறும் சிறப் பாக கொண்டாடப்படுகிறது. அகத்தியர், ஆதிசங்கரர், சங்கீத மும் மூர்த் திகள், ஞான சம்மந்தர், மாணிக்க வாசகர், அருணகிரிநாதர் ஆகியோர் அம் பாளை அகம்மகிழந்து போற்றிபாடியுள்ளனர். அன்னபூரணிக்கே அன்னையாய் விளங்குவதால் ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு அன்னாபி ஷேக மும், அன்னையின் திருவடி தரிசனத்தையும் காணலாம். இந்த திருவடி சிறப்பை அப்பர் விளமர் புறத்து அருள்மணி அடிபணிந்தவர் நிலையான பெரும் செல்ம் எய்தி நீடுலகில் நிலையால் வாழ்வார்கள் என்றும் ஞானசம்மந்தர் அத்தக அடிதொழ அருள் கண்னோடு உமையவள் என பாடி யுள்ளார். பெருமை வாய்ந்த இத்திருவடி தரிசனம் சபா, பாவ,வி÷õசனம் பெற்று முக்தி பெறுவார்.
இத்திருநாளில் கோவில் எதிரில் உள்ள அக்னி தீர்தத்தில் நீராடி அம்பி கை யை பாலபிஷேகம் செய்து அவரின் திருவடி தரிசனத்தை கண்டால் தடை படும் திருமணம் நீங்குவதுடன், புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் புத்திர பாக்கியம் பெறுவார்கள் என்பது ஐதீகம். திருவாரூர்தியாகராஜ சுவாமி திருக்கோவிலின் உபகோவிலான திருவிள மலி ல் வரலாற்றுசிறப்பு சிறப்புமிக்க மதுரபாஷினி சமேத பதஞ்சலி ம÷ னாக ரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப் பூரத்திரு விழா கோலாகமாக நடந்து வருகிறது. இந்தாண்டிற்கான விழாவை முன்னிட்டு நேற்றுகாலை விக்னேஷ்வர பூ ஜை மற்றும் வாஸ்து சாந்தி நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி பல்வேறு நிகழ்ச் சியுடன் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. இம்மாதம் 30ம் தேதி ஆடிப்பூரம் நிகழ்ச்சியில் அம்பாள் பாத தரிசன நிகழ்ச்சியும் 31ம்தேதி குத்து விளக்குப்பூஜையும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் சக்தி சந்திரசேகர சிவாச்சாரியார் உள்ளிட்ட விழாக்குழுவினர்கள் செய்து வருகின்றனர்.