மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மல்லாபுரம் காட்டு கொட்டாயில் மழை வேண்டி கிராம மக்கள் வினோத வழிபாடு நடத்தினர். மூங்கில்துறைப்பட்டு அடுத்த மல்லாபுரம், ரங்கப்பனுõர், பாப்பாத்திமூளை போன்ற மலை அடிவாரப் பகுதிகளில் விவசாயம் நன்கு செழிப்பாக வளரக்கூடிய பகுதியாகும். இப்பகுதியில் போதிய பருவ மழை பெய்யாததால் விவசாயம் பாதித்தது. கிராமத்தில் ஆண்கள் 100 க்கும் மேற்பட்டவர்கள் மல்லா புரம் மலையடிவாரத்தில் உள்ள செவ்டடிப்பான், கொங்கடிப்பான் சுவாமிக்கு பூஜை செய்து, மண் சோறு சாப்பிட்டனர். இ ப்பகுதியில் மழை பெய்ய வேண்டும், விவாசயம் செழிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.