விருத்தாசலம்: ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவ விழாவில், விருத்தாம்பிகை அம்மன் கிளி வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். விரு த்தாசலம் பாலாம்பிகை, விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவ விழா, கடந்த 21ம் தேதி கொடியே ற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. நேற்று (23ம் தேதி) மாலை 6:30 மணிக்கு அலங்கரித்த பல்லக்கில் விநாயகர், அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, கிளி வாகனத்தில் விருத்தாம்பிகை அம்மன் வீதியுலா வந்து அ ருள்பாலித்தார். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.