Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிளி வாகனத்தில் விருத்தாம்பிகை ... செஞ்சி சுப்பிரமணியருக்கு சந்தன காப்பு! செஞ்சி சுப்பிரமணியருக்கு சந்தன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழா துவங்கியது!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2014
11:07

மேட்டுப்பாளையம் : வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா, பூச்சாட்டுடன் துவங்கியது. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், இந்தாண்டு குண்டம் விழா நேற்று முன்தினம் இரவு பூச்சாட்டுடன் துவங்கியது. முன்னதாக, பவானி ஆற்றின் கரையோரம் உள்ள முத்தமிழ் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின், அம்மன் சுவாமியின் ஆபரண அணிக்கூடையை தலையில் சுமந்தபடி, பூசாரி பரமேஸ்வரனை, கோவிலுக்கு மேளதாளம் முழங்க அழைத்து வந்தனர்.சிறப்பு பூஜை செய்து, அம்மன் சுவாமிக்கு பூசாரி காப்பு கட்டினார். தொடர்ந்து, சுப்ரமணியசுவாமி கோவில் அர்ச்சகர் தனசேகர குருக்கள் பூஜை செய்து, பூசாரிக்கு காப்பு கட்டினார். பின், நெல்லித்துறை பொதுமக்கள் சார்பில், இரவு திருவிழா பூச்சாட்டப்பட்டது.

வரும் 25ம் தேதி லட்சார்ச்சனையும், 26ம் தேதி ஆடி அமாவாசையும், 27ம் தேதி கொடியேற்றமும், மாலையில் சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற உள்ளது. 28ம் தேதி பொங்கல் வைத்து குண்டம் திறப்பும், 29ம் தேதி அதிகாலை 3.00 மணிக்கு அம்மன் அழைப்பும், காலை 6.00 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடைபெற உள்ளது.வரும் 30ம் தேதி மாவிளக்கும், மாலையில் பூ பல்லாக்கில் அம்மன் திருவீதி உலாவும், 31ம் தேதி இரவு பரிவேட்டையும், வாண வேடிக்கையும் நடக்க உள்ளது. ஆக., 1ம் தேதி மகா அபிஷேகம், மஞ்சள் நீராட்டும், 3ம் தேதி ஆடிப்பெருக்கும், 4ம் தேதி 108 குத்து விளக்கு பூஜையும், 5ம் தேதி மறுபூஜையும் நடைபெற உள்ளது.விழா ஏற்பாடுகளை, துணை ஆணையர் பழனிக்குமார், பரம்பரை அறங்காவலர் வசந்தா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி : பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா இன்று (மார்ச் 18) கொடியேற்றத்துடன் துவங்கியது.பழநி ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி முதல் நாள் விழாவில் தங்க பல்லக்கில் சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : நாட்டிலுள்ள பல புண்ணிய க்ஷேத்திரங்களில் விஜய யாத்திரை புரிந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாத கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் அங்காளம்மன் கோவிலில் பூ குண்டம் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar