சிதம்பரம்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் ஆடி மாத பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று முன்தினம் தெருவடைச்சான் உற்சவம் நடந்தது. இக்கோவிலில், ஆடி மாத மகோற்சவம் கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி தினமும் கீழத்தெரு மாரிய ம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் சிறப்பு தீபாராதனை நடந்து, மாரியம்மன் வீதியுலா புறப்பாடும், இரவு காத்தவராயன் கதை சொற்பொழிவு நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு தெருவடைச்சான் உற்சவம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து 27ம் தேதி தேரோட்டம், 28ம் தேதி தீ மிதி உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் குழுத் தலைவர் வீராசாமி, கலியமூர்த்தி, செல்லதுரை, நாகரத்தினம் குடும்பத்தினர் மற்றும் கோவில் பூசாரிகள் செய்கின்றனர்.