பதிவு செய்த நாள்
24
ஜூலை
2014
12:07
தியாகதுருகம்: தியாகதுருகம், புக்குளம் எல்லையில் உள்ள திரவுபதியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. தியாகதுருகம், புக்குளம் எல்லையில் திரவுபதியம்மன் கோவில் பக்தர்கள் முயற்சியால் 35 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பித்து கும்பாபிஷேகம் கடந்த மாதம் 5ம் தேதி நடந் தது. நேற்று முன்தினம் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. மூலவர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்து சிறப்பு யாகத்துடன் அர்ச்சனைநடந்தது. சிவாச்சாரியார்கள் சரவணன், கார்த்திகேயன் பூஜைகளை செய்தனர். கிருஷ்ணமூர்த்திபிள்ளை, பிச்சாண்டிபிள்ளை, ரங்கராஜிலு நாயுடு, விஸ்வ நாதன், புகழ்வாணன், அண்ணாமலை, ஜோதி, பொன்னுசாமி, கண்ணன், கோவிமுருகன், மகாலிங்கம், முரளி, சங்கர், வேலவன் கலந்து கொண்டனர்.