திண்டிவனம்: திண்டிவனம் ஆர்ய வைசிய மகிளா விபாக், வாசவி கிளப் வனிதா சார்பில் 20 ம் ஆண்டு ராதா கல்யாண மகா உற்சவம் ராஜாஜி தெருவில் நடந்தது. பாக்யலக்ஷ்மி பார்த்தசாரதி 2 நாள் விழாவை துவக்கி வைத்தார். 19 ம் தேதி காலை 8 மணிக்கு கலச ஸ்தாபனம், விக்னேஸ்வர பூஜை, குரு கீர்த்தனைகள், அஷ்டபதி பஜனை நடந்தது. மாலை 4 மணிக்கு மகிளா விபாக் சார்பில் பஜனை, திவ்ய நாம பஜனை நடந்தது. 20ம் தேதி காலை உஞ்சவிருத்தி, மாப்பிள்ளை அழைப்பு, 10.30 மணிக்கு முத்துகுத்துதல் நடந்தது. பிச்சாண்டார் கோவில் தியாகராஜ பாகவதர், விட்டல் இளைஞர் முன்னேற்ற பஜனை மண்டலி குழுவினரால் ராதா கல்யாண மகா உற்சவம், ஆஞ்சனேயர் உற்சவம் நடந்தது. பெண்களுக்கு மங்கல பொருட்களும், பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கபட்டது.