முக்தீஸ்வரர் கோயிலில் மாணவிகள் திருவிளக்கு வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2014 10:07
மதுரை: மதுரை தெப்பக்குளம் மரகதவல்லி சமேத முக்தீஸ்வரர் கோயிலில் இன்று 1500 மாணவிகளின் திருவிளக்கு பூஜை நடந்தது. உலக உயி ர்களின் நன்மைக்காகவும், கல்வி அறிவு பெருகவும் நடந்த இந்த விளக்குபூஜை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளால் 1983ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. தைவெள்ளி, மற்றும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் இந்த விளக்கு பூ ஜையில் சுமார் ஆயிரத்து ஐநூறு மாணவிகள் கலந்து கொள்கின்றனர். பள்ளி இறுதி தேர்வு எழுதுவதற்கு முன், அனைவரும் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தை மாதத்தில் ஒரு விளக்கு பூஜையும், விடுமுறை முடிந்து பள்ளி துவங்கும் போது மாணவர்கள் நல்ல உடல்நிலை மற்றும் சிறந்த மனநிலையுடன், படிக்க வேண்டும் என்பதற்காக ஆடி மாதத்தில் ஒரு விளக்கு பூஜையும் நடத்தப் படுகிறது. இவ்வாறு வருடத்திற்கு இரண்டு முறை விளக்கு பூஜை செய்வதினால் இறைவனின் அருள் கிடைப்பதுடன், கல்வி அறிவும், ஞாபக சக்தியும் பெருகுவதாக மாணவிகள் கூறுகின்றனர்.