உலக நன்மை வேண்டி.. குருபகவான் கோவிலில் சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2014 10:07
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே குருபகவான் கோவிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பையூர் தட்சணாமூர்த்தி கோவிலில் உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் கடந்த 24ம் தேதி சிறப்பு வழிபாடு நடந்தது. மாலை 6:00 மணிக்கு 12 அடி உயர மூலவர் சிலைக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 8:00 மணிக்கு மகாதீபாராதனையும் நடந்தது.பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குருமூர்த்தி அறக்கட்டளை நிர்வாகிகள் ஞானமூர்த்தி, வெங்கட்ரமணன், ஜெகதீசன், உபயதாரர்கள் செந்தமிழ்குமரன், அரிதாஸ் செய்திருந்தனர்.