நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு கைலாசநாதர் தேவஸ்தானத்தைச் சேர்ந்த முத்துமாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா நடந்தது. கடந்த 17ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தினமும் அம்மன் வீதியுலா நடந்து வருகிறது. நேற்று (25ம் தேதி) காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அதனைத்தொடந்து செடல் திருவிழா நடந்தது. விழாவில் பக்தர்கள் செடல் போட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு 7:00 மணிக்கு தேரில் அம்மன் வீதியுலா நடந்தது.