திருப்பதி: திருமலையில் பக்தர்களின் வசதிக்காக 3-ஆவது யாத்ரீகர்கள் சதன் அருகில் சிற்றுந்து நிலையத்தை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கி உள்ளது.தலைமைப் பேருந்து நிலையம் அருகில், அடிக்கடி விபத்து, போக்குவரத்து நெரிச்சல்கள் நடைபெறுவதாக புகார்கள் பெறப்பட்டுள்ளதால், 3-ஆவது யாத்ரீகர்கள் சதன் அருகில், சிற்றுந்து நிலையத்தை போக்குவரத்துக் கழகம் ஏற்படுத்தி உள்ளதாக மேலாளர், லக்ஷ்மி நரசிம்மா ரெட்டி தெரிவித்தார்.