பதிவு செய்த நாள்
26
ஜூலை
2014
11:07
ராமேஸ்வரம்: தங்கச்சிமடம் வேர்க்காடு சந்தியாகப்பர் சர்ச்சில் திருவிழாவை யொட்டி, நேற்று முன்தினம், சிறப்பு திருப்பலி நடந்தது. அலங்கரித்த தேரில் சந்தியாகப்பர், தூதர்கள் மரியாள், தபேரியான் தனித்தேர்களில் பவனி வந்தனர். ராமநாதபுரம், தூத்துக்குடி, சாயல்குடி, மூக்கையூரை சேர்ந்த மும்மதத்தினர் பங்கேற்றனர்.மாந்தோப்பு: தங்கச்சிமடம் மாந்தோப்பு தெருவில் உள்ள சந்தியாகப்பர் சர்ச் திருவிழா, நேற்று நடந்தது. தூத்துக்குடி பங்குதந்தை பர்னபாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. அலங்கரித்த தேரில் சந்தியாகப்பர் பவனி வந்தார். ஏற்பாடுகளை தங்கச்சிமடம் பங்குதந்தை ஜேம்ஸ் அந்துவான்தாஸ், மீனவர் சங்க தலைவர்கள் சேசு, எமிரேட் செய்திருந்தனர். சாயல்குடி: சாயல்குடி அருகே மூக்கையூரில் சந்தியாகப்பர் சர்ச் திருவிழா நடந்தது. சந்தியாகப்பர், செபஸ்தியர், மிக்கேல் ஆண்டவர் தேர்பவனியில் ஏராளமானோர் பங்கேற்றனர். சிவகங்கை மறை மாவட்ட முதன்மை குருக்கள் லூர்துராஜ், கிறிஸ்டோபர், பங்குத்தந்தை எஸ். லூர்து ராஜ், ஊராட்சி தலைவர் அவிலாதெராஸ் தொம்மை உள்பட பலர் பங்கேற்றனர். சவேரியார்பட்டனம் சந்தியாகப்பர் சர்ச்சில் திருவிழா நடந்தது.