அய்யாவாடியில் நிகும்பலா யாகம் திரளான பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2014 10:07
மயிலாடுதுறை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள அய்யாவாடியில் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோ யில் உள்ளது. இங்கு அம்மாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்பு வாய்ந்தது. இந்த யாகத்தில் கலந்து கொண்டு அம்பாளை தரிசித்தால் சத்ரு உபாதை நீங்கி சகல ந ன்மைகளும் கிடைக்கும். ஆடி மாத அம்மாவாசையான நேற்றுகாலை அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்பாளை கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் ந டத்தப்பட்டன. மதியம் 01 மணிக்கு தண்டபானி குருக்கள் யாகத்தில் மிளகாய் வற்றலை கொட்டி நிகும் பலா யாகத்தை நடத்தி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய் தனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை சங்கர் குருக்கள் செய்திருந்தார். கும்பகோணத்திரிருந்த அய்யாவாடி க்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நாச்சியார்கோயில் போலீஸ் மற்றும் ஊர்காவல் படையினர் பா துகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அடுத்த நிகும்பலா யாகம் ஆகஸ்ட் மாதம் 25 ம் தேதி நடைபெ றும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.