ராஜபாளையம்: ராஜபாளையத்தில் உள்ள ஆன்மிக கல்வி மையம் அறிவு திருக்கோயிலில், மழை வேண்டி நடந்த தொடர்கூட்டு பிரார்த்தனைக்கு, டிரஸ்ட் தலைவர் காசி விஸ்வநாத ராஜா தலைமை வகித்தார். ஆடி அமாவாசையை முன்னிட்டு, நேற்று முன்தினம் நீர்காத்த அய்யனார்கோயில் வனப்பகுதியில் நீராறு, பாலாறு சேரும் அருவியில் மவுனகுரு தர்மலிங்க ராஜா தவம் செய்தார். பின், சித்தர்கள், மகான்களுக்கு சிறப்புபூஜை நடத்தினார்.