பதிவு செய்த நாள்
30
ஜூலை
2014
10:07
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு, ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பட்டு கொண்டு வரப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அணிந்த மாலை, கிளியை, மதுரை கள்ளழகர் அணிந்து ஆற்றில் இறங்குவது வழக்கம். அதேபோல், புரட்டாசி கருடசேவையில் ஆண்டாள் சூடிய மாலை, கிளியை திருப்பதி வெங்கடாஜலபதி அணிவார். ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டத்தில் ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம், ரங்கநாத பெருமாளுக்கு சாத்தப்பட்டு தேரில் எழுந்தருளுவார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம், இன்று நடைபெறுகிறது. இதற்காக, நேற்று ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து, பட்டு வஸ்திரம், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டு வரப்பட்டது. இதை, ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் தக்கார் மற்றும் செயல் அலுவலர் பெற்று கொண்டனர். ’தினமலர்’ ஆர்.ராமசுப்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.