பதிவு செய்த நாள்
30
ஜூலை
2014
11:07
திருப்பதி: திருமலை ஏழுமலையானை, இனி, இரண்டு மணி நேரத்தில் தரிசிக்கலாம்’ என, ஆந்திர அறநிலையத் துறை அமைச்சர் மாணிக்யால ராவ் தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது: திருமலை ஏழுமலையானை, சாதாரண பக்தர்கள், இரண்டு மணி நேரத்தில் தரிசிக்கலாம். மேலும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு இணைய தள முன்பதிவு துவங்கியதும், பரிந்துரை கடிதங்களுக்கு, வி.ஐ.பி., பிரேக் டிக்கெட் வழங்குவது, ரத்து செய்யப்படும். தினசரி, 5,000 வி.ஐ.பி., டிக்கெட்டுகள் வழங்கிய நிலையில், இனி, 800 டிக்கெட் மட்டும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆன் லைன் மூலம், தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும் பக்தர்கள், டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள, தரிசன நேரத்திற்கு, 2 மணிநேரம் முன், திருமலையில் இருந்தால், விரைவில் தரிசனம் முடித்து திரும்ப முடியும். பரிந்துரை கடிதம் கேட்டு வர வேண்டாம் என, அறநிலையத் துறை அமைச்சர் அலுவலகம் முன், அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.