புதுச்சேரி: சஞ்சீவிநகர் செங்கழுநீரம்மன் கோவிலில், மக்கள் நலன் வேண்டி, திருவிளக்கு பூஜை நடந்தது. மாதா அமிர்தானந்தமயி சேவா சமிதி, சஞ்சீவிநகர் பொதுமக்கள் இணைந்து மக்கள் நலன் வேண்டி, திருவிளக்கு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தன. நேற்று மாலை 5:30 மணிக்கு சஞ்சீவிநகர் செங்கழுநீரம்மன் கோவிலில், மாதா அமிர்தானந்தமயி சீடர் பிரட்சன்னாமிர்த சைதன்யா தலைமையில் விளக்கு பூஜை மற்றும் பஜனை நடந்தது. ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.