நடுவீரப்பட்டு: பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வரும் 1ம் தேதி செடல் திருவிழா நடக்கிறது. கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் வீதியுலா நடந்து வருகிறது. நேற்று காலை 8:00 மணிக்கு சிறப்பு ஹோமங்கள் நடந்தது. 9:00 மணிக்கு சாகை வார்த்தலும், 10:00 மணிக்கு 1008 குடம் தண்ணீர் ஊர்வலமாக எடுத்து வந்து 11:00 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. நாளை (31ம் தேதி) காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடந்து, 9:00 மணிக்கு பட்டு சாத்துதல் நடக்கிறது. இரவு 10:00 மணிக்கு புஷ்ப பல்லாக்கில் அம்மன் வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து 1ம் தேதி காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 9:00 மணி முதல் செடல் திருவிழாவும் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு தேரில் அம்மன் வீதியுலா நடக்கிறது. 2ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.