பதிவு செய்த நாள்
31
ஜூலை
2014
12:07
திருப்புத்தூர் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில், ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. கடந்த ஜூலை 20ல் முதலாம் நாள்,பெருமாள்,ஆண்டாள் கொடிமரம் எழுந்தருளி, கொடியேற்றத்துடன் உற்சவம் துவங்கியது. தினசரி, பல்வேறு வாகனங்களில் பெருமாள்,ஆண்டாள் திருவீதி உலா நடந்தது.நேற்று முன் தினம் அன்ன வாகனத்தில் திருவீதி வலம் வந்தனர்.நேற்றுகாலை 10 மணிக்கு தேரில் பெருமாள், ஆண்டாள் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர். பின்னர் பக்தர்கள் அர்ச்சனை செய்து, தேரில் எழுந்தருளிய பெருமாளை தரிசித்தனர். மாலை 4.40 மணிக்கு பட்டமங்கலம் நாட்டார் வடம் பிடிக்க, தேரோட்டம் நடந்தது.என்.வைரவன்பட்டி வயிரவர் கோயிலில், மகா உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. ஜூலை 22ல்,காப்புக் கட்டி உற்சவம் துவங்கியது. தினசரி காலை 8.30 மணிக்கு, சுவாமி வெள்ளி ரதத்தில் புறப்பாடும், இரவு 8 மணிக்கு, பல்வேறு வாகனங்களில், வயிரவர் திருவீதி உலாவும் நடைபெற்றது. நேற்று, ஒன்பதாம் நாளன்று, காலையில் வயிரவர் தேரில் எழுந்தருளினார். மாலை 5 மணிக்கு பக்தர்கள் வடம் பிடிக்க, தேரோட்டம் நடந்தது.