கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த காரனூரில் உள்ள வனதுர்கை அம்மனுக்கு 108 பால் குட அபிஷேகம் நடந்தது. ஆடிப்பூர விழாவையொட்டி நேற்று அதிகாலை 5:30 மணிக்கு கணபதி, மகாலஷ்மி, தன்வந்திரி, நவநாயகர் உள்ளிட்ட சாமிகளுக்கு யாகம் நடத்தினர். தொடர்ந்து 108 பால்குடங்களை வைத்து பெண்கள் பூஜைகள் செய்து, அம்மன் பாடல்களை பாடினர். யாகத்தில் மகாபூர்ணாஹுதி சேர்ப்பித்தபின், வன துர்கை அம்மனுக்கு பால்குட அபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. பெண்கள் சுமங் கலி தாம்பூலம் மற்றும் அன்னதானம் வழங்கினர்.