பதிவு செய்த நாள்
01
ஆக
2014
11:08
ராமேஸ்வரம்: ஆடித்திருக்கல்யாண விழாவை முன்னிட்டு, ராமேஸ்வரம் கோயில் தபசு மண்டகப்படியில் சுவாமி, அம்மனுக்கு மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித்திருக்கல்யாணம் 11ம் நாள் விழாவில், நேற்று காலை கோயிலில் இருந்து பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி கமலவாகனத்திலும்; சுவாமி, தங்க காளை வாகனத்திலும் புறப்பாடாகி தபசு மண்டகப்படியில் எழுந்தருளினர்.பின், சுவாமி, அம்மனுக்கு குருக்கள் விஜயகுமார் போகில், விஜயஆனந்த் ஆகியோர், மாலை மாற்றுதல் வைபவம் நடத்தினர். மகா தீபாராதனை நடந்தது. பின், சுவாமி, அம்மன் புறப்பாடாகி கோயிலில் எழுந்தருளினர். இரவு 7 மணிக்கு அனுமன் சன்னதியில் சுவாமி, அம்மனுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இரவு 9 மணிக்கு தங்கப்பல்லக்கில் அம்மன் எழுந்தருளி, மீண்டும் தபசு மண்டகப்படியில் எழுந்தருளினார்.