பதிவு செய்த நாள்
01
ஆக
2014
11:08
வடிவுடையம்மன் கோவிலில் வளைகாப்பு: திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு, வசந்த மண்டபத்தில் அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், ஆராதனைகள் நேற்று முன்தினம் நடந்தன. அம்மனுக்கு வளைகாப்பு வைபோக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.ஆண்டாளுக்கு...: திருவொற்றியூர், காலடிப்பேட்டையில், கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு, ஆண்டாள் சன்னிதியில் முக்கனிகளால் தோரணங்கள் கட்டப்பட்டன. ஆண்டாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. எல்லையம்மன் கோவிலில்...: திருவொற்றியூர், சாத்தாங்காட்டில் உள்ள எல்லையம்மன் கோவிலில், 61ம் ஆண்டு ஆடி திருவிழா மற்றும் ஆடிப்பூர விழா நேற்று துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றன. மூன்று நாள் ஆடித் திருவிழாவை முன்னிட்டு நேற்று பந்தக்கால் விழா சிறப்பாக நடைபெற்றது. வரும் 3ம் தேதி கூழ்வார்த்தல், அம்மன் வீதியுலாவும் நடைபெற உள்ளன.