பதிவு செய்த நாள்
01
ஆக
2014
11:08
கூவம்: கூவம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், வரும் 3ம் தேதி, தீமிதி திருவிழா நடைபெறவுள்ளது.கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்துள்ளது கூவம் ஊராட்சி. இங்கு முத்துமாரியமமன் (எ) ஊர்காத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், 21ம் ஆண்டு தீமிதி திருவிழா, வரும் 3ம் தேதி நடைபெறவுள்ளது.முன்னதாக, தீ மிதிக்க விரும்பும் பக்தர்கள், இன்று, மாலை 6:00 மணிக்கு, காப்பு கட்டி, விரதம் மேற்கொள்வர். அதன்பின், நாளை காலை 7:00 மணிக்கு, அம்மனை வேண்டுதல் நிகழ்ச்சி நடைபெறும் பின், ஞாயிற்றுக்கிழமை (3ம் தேதி) பகல் 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியும், பகல் 2:00 மணிக்கு அம்மனிடம் வேண்டுதல் நிறைவேற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெறும். அதன்பின், இரவு 7:00 மணிக்கு தீ மிதித்தல் நிகழ்ச்சியும், இரவு 8:00 மணிக்கு அம்மன் மலர் அலங்காரத்தில் திருவீதி உலாவும் நடைபெறும்.