கும்மிடிப்பூண்டி : சுண்ணாம்புக்குளம் கிராமத்தில் உள்ள பக்த ஜனசபா சார்பில், திரவுபதி அம்மன் கோவிலில், 12ம் ஆண்டு, விளக்கு பூஜை நடைபெற்றது.கும்மிடிப்பூண்டி அடுத்த, சுண்ணாம்புக்குளம் கிராமத்தில் உள்ள அலர்மேல்மங்கை சமேத திருவேங்கடமுடையான் பக்த ஜனசபா சார்பில், நேற்று முன்தினம், 12ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.அங்குள்ள, திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த பூஜையில், 300 பெண்கள் கலந்து கொண்டனர். விளக்கு பூஜையின் போது, மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.