திருவள்ளூர் : காக்களூர் அடுத்த, யோக ஞான தட்சிணாமூர்த்தி கோவிலில், நேற்று, 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது.இக்கோவிலில், வியாழக்கிழமை தோறும், யோக ஞான தட்சிணாமூர்த்திக்கு, 108 லிட்டர் பாலபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.நேற்று, காலை, 9:30 மணிக்கு அபிஷேகம் துவங்கியது. பாலபிஷேகம் முடிந்ததும், தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்து, அபிஷேகம் செய்யப்பட்டது.