பதிவு செய்த நாள்
02
ஆக
2014
11:08
திருப்பதி : திருமலை ஏழுமலை யான் வங்கிக் கணக்கில், மீண்டும், 1,800 கிலோ தங்கம், வரவு வைக்கப்படுகிறது. திருமலை ஏழுமலையானுக்கு, பக்தர்கள், உண்டியலில் காணிக்கையாக செலுத்தியது மற்றும் நன்கொடையாக வழங்கியது, என, 1,800 கிலோ தங்கத்தை, எஸ்.பி.ஐ., வங்கியில், தங்கம் வைப்பு நிதியாக தேவஸ்தானம் வைக்கிறது. இதற்காக, நேற்று எஸ்.பி.ஐ.,யின் தலைவர், அருந்ததி பட்டாச்சார்யா, திருமலைக்கு வந்தார். இன்று காலை, 1,800 கிலோ தங்கத்தை, தேவஸ்தான செயல் அதிகாரி எம்.ஜி.கோபால், எஸ்.பி.ஐ.,யில் தங்கம் வைப்பு நிதியாக அளிக்கிறார். இதன் மூலம், தற்போது ஏழுமலையான் கணக்கில், தங்கம், 6,800 கிலோவை எட்டியுள்ளது. ஏற்கனவே, வங்கியில் பாதுகாக்கும் தங்கத்திற்கு பதில், பணம் பெறாமல், தங்கத்தையே அளிக்கும்படி, வங்கியிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.கடந்த நான்கு ஆண்டுகளில், ஐந்து கிலோ தங்கம், எஸ்.பி.ஐ., இந்தியன் வங்கி, கார்ப்பரேஷன் வங்கிகளில், தங்கம் வைப்பு நிதி மூலம் பாதுகாக்கப்படுகிறது. இதில், அதிக வைப்பு நிதி, எஸ்.பி.ஐ.,யிடம் மட்டுமே உள்ளது. அதனால், 100 கிலோ தங்கத்திற்கு, 1 கிலோ தங்கத்தை வட்டியாக அளிக்க வேண்டும் என, வங்கிகளிடம், தேவஸ்தானம் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதுவரை, வங்கியில் உள்ள, வட்டியாக, 50 கிலோ தங்கம் கிடைத்துள்ளது.