ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் முத்தாலம்மன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜைகள் செய்தனர். ஆடி விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தது. பொதுமக்கள் கொடுத்த சிறுதானியங்களைக்கொண்டு கூழ் காய்ச்சி அம்மனுக்கு படைத்தனர். மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் பிரார்த்தனை செய்தனர். ஏற்பாடுகளை நயினார்சேர்வை, சுருளிகவுண்டர் செய்திருந்தனர்.