காளையார்கோவில் : காளையார்கோவில் தெற்குதெரு முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி உற்சவத்தை முன்னிட்டு முளைப்பாரி விழா,காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு கரகம் எடுத்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. பெண்கள் முளைப்பாரியை அம்மன் கோவிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று குளத்தில் கரைத்தனர்.