பதிவு செய்த நாள்
14
ஆக
2014
04:08
மதிநுட்பத்துடன் செயல்படும் கடக ராசி அன்பர்களே!
நவக்கிரகங்களில் ராகு மாதம் முழுவதும் நன்மை தர காத்திருக்கிறார் . அவரால் பொருளாதார வளம், குடும்பத்தில் அமைதி, தொழில் விருத்தி ஆகியவை உண்டாகும். சுக்கிரன் நன்மை தரும் நிலையில் உள்ளார். பெண்களால் சுகம் கிடைக்கும். பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். அரசின் சலுகை கிடைக்கும். உங்கள் ராசி நாதன் சந்திரனால் உள்ளத்தில் எப்போதும் உற்சாகம் நிலைத்திருக்கும். புதன் 2 ல் இருந்து பிற்போக்கான பலனை தரலாம். குறிப்பாக அவப்பெயர் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம். புதன் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது பார்வை சாதகமாக அமைந்துள்ளது. அதன் மூலம் உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சூரியன் சிம்மத்தில் இருப்பதால் பொருள் விரயம் ஏற்படும். கண் வலி வரலாம்.செவ்வாயால் செப். 1 வரை வயிறு பிரச்னை உருவாகலாம். பயணத்தின் போது கவனம் தேவை. குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். வீட்டுக்கு தேவையானஅனைத்தும் கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் இருந்த வீண் விரயம் இனி குறையும். புதிய தொழில் தொடங்க உகந்த காலம் அல்ல. ஆனால்உங்கள் மூளை பலத்தை பயன்படுத்தி ஆதாயம் காணலாம்.பணியாளர்கள் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உங்கள் பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.
அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் காணப்படுவர். பிரதி பலனை எதிர்பாராமல் பாடுபடவேண்டும்.
மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது அவசியம். போட்டிகளில் வெற்றி காண்பது அரிது. ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது நல்லது.
விவசாயிகளுக்கு வருவாய்க்கு குறைவு இருக்காது. கால்நடை வளர்ப்பிலும் ஆதாயம் கிடைக்கும்.
பெண்கள் சிறப்பான பலனை காணலாம். உங்களால் குடும்பம் சிறக்கும். மனம் போல ஆடை, ஆபரணம் வாங்கி மகிழலாம். அண்டை வீட்டாரிடம் சுமூக நிலை ஏற்படும்.
நல்ல நாள்: ஆக.17,18,19,23,24,28,29, செப். 4,5,6,7,12, 13,14,15,16
கவனநாள்: செப். 8,9 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 7,8 நிறம்: வெள்ளை, நீலம்
வழிபாடு: நவக்கிரக வழிபாடு நன்மை தரும். தினமும் காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள். தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். வயதான மூதாட்டிகளுக்கு உதவுங்கள்.
தொடர்புடைய கோயில்கள் :