ராசி நாதனான செவ்வாய், ஆவணி மாதம் முழுவதும் சுமாரான பலனையே தரும் இடத்தில் இருக்கிறார். உஷ்ண வியாதிகள் உருவாகலாம். பொருள் விரயம் ஏற்படலாம். செப். 1க்குப் பிறகு பகைவரால் தொல்லை ஏற்படலாம். புதன் 10-ம் இடமான சிம்மத்தில் இருக்கிறார். இதனால் பெண்களால் நன்மை உண்டாகும். பொன், பொருள் சேரும். புதனின் பார்வையால் குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆக. 26ல் அவர் கன்னி ராசிக்கு சென்றாலும் நன்மையே தொடரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். முயற்சியில் வெற்றி உண்டாகும். சூரியன் 10-ம் இடமான சிம்மத்தில் இருப்பதால் கையில் எப்போதும் நல்ல பணப்புழக்கம் இருக்கும். சுக்கிரன் தற்போது 9-ம் இடமான கடகத்தில் இருப்பதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொருளாதார வளம் கூடும். செப். 1ல் சுக்கிரன் 10-ம் இடமான சிம்ம ராசிக்கு மாறுகிறார்.அங்கு அவரால் அவப்பெயர் உருவாகலாம்.குரு சாதகமான இடத்தில் இருப்பதால் உற்சாகம் பிறக்கும். குடும்பத் தேவை பூர்த்தி ஆகும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். திருமணம் நடக்க வாய்ப்புண்டு. குடும்பம்- தம்பதி இடையே அன்னியோன்ய மான சூழ்நிலை இருக்கும்.
தொழில், வியாபாரத்தில் புதிய முயற்சியில் வெற்றி உண்டாகும். ஆக. 26க்கு பிறகு தொழிலில் லாபம் அதிகரிக்கும்.செப். 1 க்கு பிறகு எதிரியால் தொல்லை ஏற்படும்.
பணியாளர்கள் எதிர்பார்க்கும் சலுகை, கோரிக்கை நிறைவேறும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். செப். 1க்கு பிறகு எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைப்பது அரிது. அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களின் கையில் பணப்புழக்கத்திற்கு குறை இருக்காது.
மாணவர்கள் போட்டிகளில் வெற்றி பெறுவர். ஆசிரியர்களின் ஆலோசனையால் வளர்ச்சி பெறுவர்.
விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் சிறப்பான பலன் காண்பர். பெண்களுக்கு குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடு கண்டு மகிழ்வர்.
நல்ல நாள்: ஆக. 17,18,19,25,26,27,28,29, செப். 1,2,3,6,7, 12,13,14,15,16
கவன நாள்: ஆக. 20,21,22 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: செந்துõரம், பச்சை
வழிபாடு: முருகன் வழிபாட்டால் ஆரோக்கியம் மேம்படும். ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நல்வாழ்வுக்கு துணை நிற்கும். சனியன்று ஆஞ்சநேயரை வணங்குங்கள்.