கும்பம்: (அவிட்டம்,3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) பதவி உயர்வு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2014 05:08
மன வலிமை மிக்கவர்களான கும்ப ராசி அன்பர்களே!
துலாம் ராசியில் உச்சம் பெற்று சனி இருந்தாலும் உங்களுக்கு நன்மை தரும் நிலையில் இல்லை. ஆனால் அவரது பார்வை மூலம் நன்மை உண்டாகும். 7 ல் இருக்கும் சூரியனால் அலைச்சல் அதிகரிக்கும். அவப்பெயர் வரலாம். உடல் நலனில் அக்கறை தேவை. செவ்வாய் ராசிக்கு 9 ல் இருப்பதால், முயற்சியில் தோல்வியும், பொருள் நஷ்டத்தையும் தரலாம். செப். 1 க்கு பிறகு நீங்கிவிடும். ஆனால், உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். எதிரி தொல்லை ஏற்படும். பயணத்தின் போது கவனம் தேவை. புதன் 7-ம் இடமான சிம்மத்தில் இருக்கிறார். அதனால் குடும்பத்தில் குழப்பம் உருவாகும். சிலர் தொழில் ரீதியாக மனைவி, குழந்தைகளை விட்டு பிரிந்திருக்க நேரிடும். ஆனால் ஆக. 26க்குப் பிறகு பிரச்னை தீர்ந்து வெற்றி கிட்டும். ஆடை, அணிகலன் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். செப். 1ல் சுக்கிரன் 7-ம் இடத்துக்கு மாறிச் செல்வதால் பெண்களால் தொல்லை வரலாம். குடும்பத்தில் கணவன், மனைவி இடையே இருந்த கருத்துவேறுபாடு ஆக. 26 க்கு பிறகு மறையும். அதன் பிறகு பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். அன்பும் பாசமும் ஏற்படும்.
தொழில், வியாபாரத்தில் வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும்.
பணியாளர்களுக்கு உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு தேடி வரும். சிலருக்கு பதவி உயர்வும் காத்திருக்கிறது. பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
மாணவர்கள்- கல்வியில் நல்ல வளத்தை காணலாம். பின் தங்கிய நிலை மறையும்.
விவசாயிகள் சீரான மகசூல் பெறுவர். கால்நடை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
பெண்களுக்கு நற்பெயர் கிடைக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும்.
நல்ல நாள்: ஆக. 17,23,24,25,26,27,செப். 1,2,3, 4,5,8,9,12,13
கவன நாள்: ஆக. 28,29 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,2 நிறம்: பச்சை, வெள்ளை
வழிபாடு: தினமும் சூரியனை வழிபடுங்கள். ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம். ராகு காலத்தில் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.