செஞ்சி: செஞ்சி தாலுகா காரியமங்கலம் கருணாசாயி பாபா கோவிலில் இரண்டாம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. காலையில் கோபூஜை, சாயி பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம், ராஜ ராஜேஸ்வரிக்கு பால் அபிஷேகம் நடந்தது.இங்குள்ள பிருந்தாவனத்தில் ராகவேந்திரருக்கு பூர்த்தி விழா நடந் தது. காலை 9 மணிக்கு திரு விளக்கு பூஜை, அம்பாளுக்கும் பூச்சொரிதலும் நடந்தது. 12 மணிக்கு மகா தீபாராதனை, 12.30 மணிக்கு அன்னதானமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை கருணா சாயி டிரஸ்டினர் செய்தனர்.