பதிவு செய்த நாள்
20
ஆக
2014
11:08
திருப்பதி: திருமலையில்,இன்று முதல், 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட் இணைய தள முன்பதிவு துவங்க உள்ளது,” என, தேவஸ்தான செயல் அதிகாரி கோபால் தெரிவித்தார். இன்று முதல், 5,000 எண்ணிக்கையில், 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்களை, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்த உள்ளது. அதில், 2,500 டிக்கெட்டுகளை தேவஸ்தான இணையதளமான, ttd.sevaonline.com மூலமும், மீதம் உள்ள 2,500 டிக்கெட்டுகளை இ தர்ஷன் கவுன்டர்கள் மூலமும் அளிக்கப்பட உள்ளது. இந்த டிக்கெட்களின் முன்பதிவு, இன்று காலை, 9:00 மணி முதல் துவங்குகிறது. பக்தர்கள், ஒரு வாரத்திற்கு முன் வரை, டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். உதாரணமாக, இன்று முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்களுக்கு, 27ம் தேதி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். ஒரு நாளைக்கு, திருமலையில், 15 ஆயிரம் டிக்கெட்கள் வழங்கப்படுகின்றன. அதில், 5,000 டிக்கெட்கள் இணையதள முன்பதிவு மூலமும், மீதம் உள்ள, 10 ஆயிரம் டிக்கெட்கள் திருமலையிலும், வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இணையதள முன்பதிவு வெற்றியடைந்தால், 18 ஆயிரம் டிக்கெட்கள் இணையதளம் மூலம் வழங்கப்படும்.
தொடர்புடைய கோயில்கள் :