பதிவு செய்த நாள்
20
ஆக
2014
11:08
சேலம்: சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆடி பண்டிகைக்கு பின்னர், நேற்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அதில், 16.46 லட்சம் ரூபாய், தங்கம், வெள்ளி ஆகியவை வருவாயாக கிடைத்தது. சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிப்பண்டிகை, ஜூலை, 22ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கி, நடந்து வந்தது. பண்டிகையை முன்னிட்டு, கோவில் வளாகத்தில், ஏழு சிறப்பு உண்டியல்கள் வைக்கப்பட்டன. நேற்று, கோவில் வளாகத்தில், உண்டியல் எண்ணும் பணி துவங்கியது. சேலம் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராமு, ஆய்வாளர் உமாதேவி, நிர்வாக அதிகாரி மற்றொரு உமாதேவி, தலைமை எழுத்தர் பிரபு ஆகியோர் முன்னிலையில், கோவில் உண்டியல், "சீல் உடைக்கப்பட்டு எண்ணப்பட்டது. பணியில், சுய உதவிக்குழுவை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். வழக்கமான உண்டியல், 10, சிறப்பு உண்டியல் ஏழு ஆகியவை எண்ணப்பட்டது. இதில், 16 லட்சத்து, 46 ஆயிரத்து, 219 ரூபாய் பணம், 92 கிராம் தங்கம், 430 கிராம் வெள்ளி, அமெரிக்க, மலேஷிய டாலர்கள் தலா ஒன்று கிடைத்தது. உண்டியலில், அதிகளவில், பெண்களின் தாலி, மூக்குத்தி ஆகியவை கிடைத்தது.
தொடர்புடைய கோயில்கள் :