ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி நிகழ்ச்சி நடந்தது. முதல்நாள் வேதபிரான்பட்டர் சுதர்சனன் கிருஷ்ண ஜெயந்தி புராணம்படித்தல் நடந்தது. மறுநாள் இரவு ஆண்டாள், ரெங்கமன்னார், கிருஷ்ணர், வடபத்ரசாயி வீதி உலாவும் நான்கு ரதவீதிகளிலும் வைத்து உறியடி நிகழ்ச்சி, வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது.
சாத்தூர் : தாயில்பட்டி கட்டணஞ்செவல் கிராமத்தில் கிருஷ்ணஜெயந்தி முன்னிட்டு சுவாமி ஊர்வலம் நடந்தது. கண்ணன் கோயிலில் துவங்கிய ஊர்வலம் முரளிதர சுவாமிஜி படத்துடன் முக்கியவீதிகள் வழியாக வலம் வந்தது.
* அருப்புக்கோட்டை சந்திரா நேஷனல் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. மாணவ, மாணவியர் சொற்பொழிவு, கண்ணன் பாடல்கள், கண்ணன் அவதாரம், நாடகம் மற்றும் கோபியர் நடனம் நடத்தி காட்டினர். செயலர் சரவணன் முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை முதல்வர் கணேசன் தலைமையில், ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்தனர்.