பதிவு செய்த நாள்
20
ஆக
2014
12:08
திருப்பதி: திருப்பதியில், கோகுலாஷ்டமியை ஒட்டி, கோ பூஜை விமரிசையாக நடந்தது. திருப்பதியில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமாக கோசாலை உள்ளது. இங்கு, 12 வகையான பசு மாடுகள் பராமரிக்கப்படுகின்றன. ஓங்கோல், சாஹிவால், பூங்கனூர், கிர், ஹரியானா, டியோனி, காங்கிரஸ், ஆம்பலாச்சாரி போன்ற பல வகையான பசுக்கள் உள்ளன. இப்பசுக்களில் இருந்து பெறப்படும் பால், தேவஸ்தானத்தின் பல அறக்கட்டளைகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. அதே போல், 450 ஏக்கரில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பலமனேரி அருகில், புதிய கோசாலையை அமைக்க, தேவஸ்தானம் திட்டமிட்டு வருகிறது. அதனால், தேவஸ்தான கோசாலையில் யாகங்கள், கோ பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, திருப்பதி கோசாலையில் உள்ள கோபால கிருஷ்ணன் கோவிலில், நேற்று, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின், பசுக்களுக்கு அகத்திக்கீரை, பசும்புற்களை தேவஸ்தான அதிகாரிகள் அளித்தனர்.