பதிவு செய்த நாள்
20
ஆக
2014
12:08
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனி பகவான் கோவிலுக்கு, தனி அதிகாரியாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமிக்க வேண்டும் என, திருநள்ளார் நகர முன்னேற்ற பொது நல அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. திருநள்ளார் நகர முன்னேற்ற பொது நல அமைப்பின் ஆலோசனை கூட்டத்திற்கு அமைப்பின் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜெயபால், பாஸ்கரன், சட்ட ஆலோசகர் செல்வசண்முகம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கோவிலில் 250 ஊழியர்கள் பணியில் உள்ளனர். ஆனால் ஊழியர்களை கண்காணிக்க, அதிகாரி இல்லை. அத்துடன் கோவிலில் தனி நபர்கள், அரசியல்வாதிகள் ஆதரவுடன் செயல்படுகின்றனர். கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுகின்றது. வரும் டிசம்பர் மாதம் சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ள நிலையில், அதற்கான எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யவில்லை. பக்தர்கள் வசதிக்காக நளன்குளம், கோவில் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். சனீஸ்வரன் கோவில் நிர்வாகத்தைக் கவனிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இது குறித்து, முதல்வர் ரங்கசாமிக்கு கோரிக்கை மனுவும் அனுப்பியுள்ளனர்.
தொடர்புடைய கோயில்கள் :