பதிவு செய்த நாள்
21
ஆக
2014
12:08
திருப்புத்தூர் : சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி பெருவிழா நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, 9:00 மணிக்கு, மூஷிக படம் எழுதப்பட்ட கொடிப்பட்டம், கோவிலை வலம் வந்தது. பிச்சை சிவாச்சாரியார் தலைமையில், கொடி மரம், கொடிக்கான சிறப்பு பூஜை துவங்கியது. காலை, 9:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. கொடி மரம் அருகே, அங்குசத் தேவருக்கு, சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தன. தங்கக் கவசத்தில், கற்பக விநாயகர் எழுந்தருளினார். வரும், ஆக., 25ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, அசூரனை, கற்பக விநாயகர் வதம் செய்யும், கஜமுக சூரசம்ஹாரம் நடக்கும். 9ம் திருநாளான, ஆக., 28ல், தேரோட்டம் நடக்கும்; அன்று, மாலை, 4:30 மணி முதல், இரவு, 10:00 மணி வரை, மூலவர் சந்தனக்காப்பில் அருள்பாலிப்பார்.