பதிவு செய்த நாள்
21
ஆக
2014
12:08
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் உபகோயிலான பத்ரகாளியம்மன், ஈஸ்வரி அம்மன், உஜ் ஜைனி அம்மன் கோயில்களில், ரூ.13.20 லட்சத்தில் திருப்பணிகள் நடக்கிறது. இதில் பத்ரகாளியம்மன் கோயிலில் திருப்பணிகள் முடிந்து, நேற்று முன்தினம் முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் குருக்கள் உதயகுமார் மற்றும் சிலர் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர், பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், தக்கார் குமரன் சேதுபதி, நகராட்சி தலைவர் அர்ச்சுனன், துணை தலைவர் குணசேகரன், கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் கக்காரின், ராஜாங்கம், பேஷ்கார்கள் ராதா, அண்ணாதுரை, கமலநாதன், அ.தி.மு.க., நிர்வாகிகள் பிச்சை, முனியசாமி, முருகன், முன்னாள் அறங்காவலர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.