செப்.,7 ல் பழநி திருஆவினன்குடி கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2014 10:08
பழநி: முருகப்பெருமானின் மூன்றாம்படை வீடான பழநி திருஆவினன்குடி கோயிலில் செப்.,7ல் மகாகும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. திருஆவினன்குடி கோயிலில், 2012 ஜூலையில் ஆடி அமாவாசையன்று, சிறப்பு பூஜை செய்து, ரூ.90 லட்சம் செலவிலான கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்கியது. இதில், கோபுரங்களில் சேதமடைந்துள்ள சுதைகளை புதுப்பித்து, வர்ணம் பூசப்பட்டுள்ளது. மயில் மண்டபத்தில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. சனீஸ்வரர் சன்னதி மேல்கோபுரம் புதிய சுதைகளுடன் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. உள் மற்றும் வெளிப்பிரகார மண்டபங்களில் உள்ள ஓவியங்கள், சிலைகள் புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளது. இறுதியாக, ராஜகோபுரத்தில் வர்ணம்பூசும் பணிகள் முடிந்துள்ளது. செப்., 7ல் கும்பாபிஷேகம் நடைபெறஉள்ளது. முதற்கட்டமாக இன்று காலை 10 மணிக்கு மேல் யாகசாலைகள் அமைப்பதற்காக, முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி மயில்மண்டபத்தில் நடக்கிறது.