பதிவு செய்த நாள்
22
ஆக
2014
12:08
அந்தியூர்: அந்தியூர், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், உலக அமைதி வேண்டியும், வேளாண்மை செழிக்க, மழை பெய்யவும், இயற்கையின் சீற்றம் நிகழாமல் இருக்கவும், கஞ்சிக்கலையம் எடுத்து, ஊர்வலம் சென்றனர். பத்திரகாளியம்மன் கோவில் முன்பு துவங்கிய ஊர்வலம், சிங்கார வீதி, அரசு மருத்துவமனை வழியாக சென்று, பார்கூர் ரோடு வழியாக, ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தை வந்தடைந்தது. இங்கு ஆதிபராசக்திக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வழிபாடு நடந்தது. பின், கலையத்தில் கொண்டு வந்த கஞ்சியை, பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும், பிரசாதமாக வழங்கினர். பின், அன்னதானம் நடந்தது. இந்த ஊர்வலத்தில், தவிட்டுப்பாளையம், பிரம்மதேசம், புதுமேட்டூர், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, வழிபாட்டு மன்ற வட்டாரத்தலைவர் காலமேகம், மன்ற தலைவர் லட்சுமணன், கோவிந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.