பதிவு செய்த நாள்
26
ஆக
2014
10:08
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித்திருவிழாவில், பத்தாம் திருவிழாவான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித்திருவிழா ஆக., 16ல் காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாள் நடக்கும் திருவிழாவில், 5ம் நாள் திருவிழாவில், தீபாராதனை நடந்தது. 7ம் நாளில் காலை 5 மணிக்கு சண்முகருக்கு உருகுசட்ட சேவை நடந்தது. மாலை 4.30க்கு சண்முகர் தங்க சப்பரத்தில், சிவப்பு சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். எட்டாம் நாள் திருவிழாவில் காலை 5 க்கு சண்முகர் வெள்ளி சப்பரத்தில், வெள்ளை சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
10 ம் நாள்திருவிழாவில் நேற்று, குமரவிடங்க பெருமான் வள்ளி, தெய்வா?னயுடன் காலை 6 மணிக்கு தேரில் எழுந்தருளினார். இதில் விநாயகர் தேர் காலை 6.20 மணிக்கு புறப்பட்டு 7.05 க்கு நிலைக்கு வந்தது. இரண்டாவதாக சுவாமி தேர் காலை 7.20 க்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. 8.15 க்கு நிலையை அடைந்தது. மூன்றாவதாக அம்மன் தேர் காலை 8.20க்கு புறப்பட்டு, 9.20க்கு நிலையை அடைந்தது. ரத வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது.பக்தர்கள் திரண்டு நின்று முருகனை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் ஞானசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.
தொடர்புடைய கோயில்கள் :